பெண்ணே உனக்காக

பென்சில் பிடிக்க வேண்டிய கைகளில் உனக்காக
பட்டாம் பூச்சிகளை பிடித்து வந்தேன்,
வானவில்லின் வண்ணங்களை கண்டு ரசிக்கும் பருவத்தில்
நீ அணிந்து வந்த தாவணியின் வண்ணங்களை ரசித்தேன்,
பாட பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டிய காலங்களில்
நீ கன்னிகையாக தேர்ச்சி பெற்றதற்கான காரணங்களை தேடினேன்,
உன் மனதில் இடம் பிடிக்க என் மனதில்
புகையினை புதைத்தேன்,
என் கனவுகளை உன்  பெண்மையை மெருகூட்டும் சேலையில் தொலைத்தேன்...

2 comments: